Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

34 வருடங்களுக்கு பின் திறக்கப்பட்ட வீதி!

Top Post Ad

 


34 வருடங்களுக்கு பின் திறக்கப்பட்ட வீதி!



யாழ்ப்பாணம் பலாலி வீதியில் வசாவிளான் மத்திய கல்லூரியிலிருந்து அச்சுவேலி - தோலகட்டி சந்தி வரையிலான வீதி 34 வருடங்களுக்குப் பின்னர் மக்கள் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது.


இன்று (01) காலை 6 மணி முதல் இந்த வீதி மக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டுள்ளது.


பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டிலிருந்த குறித்த பகுதி வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனின் முயற்ச்சிகமைய மக்கள் பாவனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.


குறித்த வீதியில் காணப்பட்ட வீதித்தடைகள் இன்று காலை முதல் பாதுகாப்பு தரப்பினரால் அகற்றப்பட்டுள்ளன. 


@ CM

Tags

ads