Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

நிந்தவூர் கே.ஆர்.முகம்மது ஆசாத் அகில இந்திய ஓவியப் போட்டியில் முதலிடம்.

 


இந்திய 'Mycological Society of India' வின் பொன்விழா கொண்டாட்டம் (50வது ஆண்டு நிறைவு விழா) "Biodiversity, Biotechnology and Bioprospects of Fungi for Agricultural, Industrial and Environment Sustainability" (BBBFAIES - 2023) பற்றிய சர்வதேச மாநாட்டுடன் எதிர்வரும் டிசம்பர் 2023 இல் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளது.


இந்த பொன்விழா கொண்டாட்டத்தினை முன்னிட்டு அகில இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கிடையில் மாபெரும் வண்ணச் சித்திர ஓவியப் போட்டி ஒன்றினை இந்திய 'Mycological Society of India' நடாத்தியது. இதில் குஜராத், மர்வாடி பல்கலைக்கழக மூன்றாம் வருட மாணவன் நிந்தவூரைச் சேர்ந்த கே.ஆர்.முகம்மது ஆசாத் அவர்கள் கலந்து கொண்டு முதலிடத்தை தன் வசப்படுத்தியுள்ளார்.  


குஜராத் மாநில மர்வாடி பல்கலைக்கழகத்தில் Microbiology (நுண்ணுயிரியல்) துறையில் மூன்றாம் ஆண்டில் பட்டப்படிப்பினை மேற் கொண்டு வரும் நிந்தவூரைச் சேர்ந்த கலீலுர் ரஹ்மான் முகம்மது ஆசாத் அவர்கள் ஓய்வு பெற்ற பாடசாலை ஊழியர் கலீலுர் ரஹ்மான் மற்றும் கல்முனை மாவட்ட நீதிமன்ற முதன்மை முகாமைத்துவ உதவியாளர் அகமது லெப்பை ஜுனைதா ஆகியோரின் மூத்த மகனும் ஓய்வு பெற்ற அதிபரும் அல் மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையின் ஸ்தாபகருமான மைமூனா செய்னுலாப்தீன் அவர்களின் ஒன்றுவிட்ட பேரனும் ஆவார்.


நிந்தவூர் சீ.ஓ.லெஸ்தகீர் சர்வதேச பாடசாலை மற்றும் அக்கரைப்பற்று மத்திய கல்லூரியின் பழைய மாணவருமான கே.ஆர்.முகம்மது ஆசாத் அவர்கள் ஆண்டு ஒன்று முதல் ஆங்கில மொழி மூலம் கல்வி பயின்றார். இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மேற்ப்படிப்பிற்கான புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்புச் சித்தி பெற்று நுண்ணுயிரியல் (Microbiology) துறையில் இறுதியாண்டில் குஜராத் மர்வாடி பல்கலைக்கழகத்தில் தற்போது கல்வி பயின்று வருகிறார்.


இடம்பெறவிருக்கும் இந்திய 'Mycological Society of India' வின் பொன்விழா கொண்டாட்ட நிகழ்வில் அனைத்து இந்திய பல்கலைக் கழகங்களுக்கிடையில் வண்ண ஓவியப் போட்டியில் முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்ட முகம்மது ஆசாத் அகில இந்திய ரீதியில் கௌரவிக்கப் படவுள்ளார்.


குஜராத் மர்வாடி பல்கலைக்கழகத்திற்கு மட்டுமல்ல, முழு இந்தியாவுக்கும் ஏன், இலங்கைக்கும் பெருமையை பெற்றுக் கொடுத்திருக்கிறார். இந்நேரத்தில் நிந்தவூர் மண் அளப்பரிய கௌரவதையும் பெருமையையும் பெறுகிறது. 


இவர் எதிர்காலத்தில் தனது கல்வித்துறையிலும் ஏனைய கல்விசாரா துறைகளிலும் சாதனைகள் பல புரிந்து விருதுகளையும் பெற வாழ்த்துகிறேன்.


- ஜபறுல்லா சாஹிப்

Tags

ads