கல்குடா "டோன் டச்" விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், பொலன்னறுவை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த 32 முன்னணிக் கழகங்கள் கலந்து கொண்ட ஈஸ்டன் ரி-10 பிளாஸ்ட் கடின பந்து கிரிக்கெட் சமர் சுற்றுப் போட்டி மிகவும் பிரமாண்டமான முறையில் ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் நேற்று (06) நடை பெற்றது.
நூருல் ஹுதா உமர்
இறுதிப் போட்டியில் சம்மாந்துறை விளையாட்டுக் கழகமும் சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகமும் பலப்பரீட்சையில் இறங்கின.
முதலில் துடுப்பாடிய சம்மாந்துறை விளையாட்டு கழக அணியினர் 10 ஓவர்களின் முடிவில் இரண்டு விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 112 ஓட்டங்களைப் பெற்றனர். பதிலுக்கு 113 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகம் 09 ஓவர்களில் 05 விக்கெட்டுக்களை இழந்து சுற்றுத்தொடரின் சாம்பியனானது.
இப்போட்டியில் மிகச்சிறப்பாகத்துடுப்பாடிய முஹம்மட் றிபான் ஆட்டமிழக்காமல் 66 (26) ஓட்டங்களைப் பெற்றதுடன் 17 பந்துகளில் 51 ஓட்டங்களை மிக வேகமாகக் குவித்த
இவர் ஆட்ட நாயகனாகத் தெரிவு செய்யப்பட்ட அதே வேளை, போட்டித் தொடர் நாயகனாகவும் சிறந்த பந்து வீச்சாளராகவும் எஸ்.எம்.சுஜான் தெரிவு செய்யப்பட்டார்.
சம்பியனான சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகத்தினருக்கான கிண்ணம் பரிசில்களை பிரதம அதிதி சட்டத்தரணி எம்.எம்.எம்.றாசீக் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.