Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

யாழில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் மரணம்!

 


யாழ்ப்பாணம் புலோலியை சேர்ந்த, மன்னார் சென் சேவியர் பெண்கள் கல்லூரியின் ஆசிரியையான 30 வயதுடைய அனுசன் துளசி என்பவரே நேற்று (16.08.2023) உயிரிழந்துள்ளார்.


திடீர் வயிற்று வலியினால் துடித்த அவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது , அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.


மரணித்தமைக்கான காரணம்


உடற்கூற்றுப் பரிசோதனையின் போது , கர்ப்பப்பை குழாயினுள், கரு தங்கியமையால் கர்ப்பப்பை குழாய் வெடித்து மரணம் சம்பவித்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

Tags

ads