தொடருந்து கட்டுப்பாட்டாளர்களின் திடீர் பணிப்புறக்கணிப்பு காரணமாக பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
தொடருந்து உப கட்டுப்பாட்டாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் இந்த பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்திருந்தனர்.
நேற்று மாலை 7 மணியளவில் மாளிகாவத்தை தொடருந்து நிலைய முற்றத்தில் பணிபுரியும் மற்றுமொரு ஊழியரால் தொடருந்து உப கட்டுப்பாட்டாளர் ஒருவர் தாக்கப்பட்டதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தொழிற்சங்க நடவடிக்கையை இரவு ஒன்பது மணியுடன் முடிவுக்கு கொண்டுவர தொழிற்சங்கம் நடவடிக்கை எடுத்தது. இயக்கப்பட வேண்டிய தொடருந்து தாமதமானது குறித்து தொடருந்து பயணிகள் கோபத்துடன் கருத்து வெளியிட்டிருந்தனர்.
தொழிற்சங்கங்கள்
அதற்கமைய, உடனடி நடவடிக்கையாக, அந்த பகுதியில் இருந்து ஓடும் தொடருந்துகளுக்கான பணியில் ஈடுபடாமல் இருக்க தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், இரவு அஞ்சல் தொடருந்து தாமதமாகியதுடன், பல தொடருந்து பயணங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
பயணிகள்
இந்த நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் ஏழைகளைப் பற்றி சிந்திப்பதில்லை. நாம் செல்லும் வழியைப் பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை என பலரும் குற்றம் சுமத்தியுள்ளனர்.