மட்டக்களப்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு அனுப்புவதாக ஒருவரிடம் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வீதம் 22 பேரிடம் சுமார் ஒரு கோடி ரூபாய் பணமோசடி செய்த போலி முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அமிர்தகழி பிரதேசத்திலுள்ள போலி முகவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்
ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இருந்து சென்ற வேலைவாய்ப்பு பணியகத்தினரால் முற்றுகையிடப்பட்டு இந்த அதிரடி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது