சீனாவின் சினோபெக் நிறுவனம் பெட்ரோலை குறைந்த விலையில் விற்பனை செய்வதால் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பெட்ரோலிய விற்பனையில் வீழ்ச்சியானது இலாபத்தில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் பெட்ரோலிய பிரிவினையாளர்கள் சங்கத்திற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (11.10.2023) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் இத்தகவலை தெரிவித்துள்ளார்.