இன்று வெளியான 5ம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின் பிரகாரம் நிந்தவூர் அஸ் ஸபா வித்தியாலயத்தில் 13 மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள். இப் பெறுபேறுகள் நிந்தவூர் கோட்டைக் கல்வி மட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளது.
அத்துடன் இப் பாடசாலை மாணவனான அஸ்வத் அலி ஆக்கிஷ் அலி கோட்டை மட்டத்தில் 175 அதிகூடிய புள்ளியைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இன்று (17.11.2023) சித்தி பெற்ற மாணவர்கள்
பாடசாலைச் சமுகத்தில் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
இப் பெறுபேற்றினை அடைவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அதிபர், பகுதி தலைவர், பாட ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் போன்றோர் பாராட்டுக்குரியவர்கள்.