Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

இலங்கை நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினால் கௌரவ நீதிபதியாக அக்கரைப்பற்று ரதீப் அஹமட் நியமனம்.




இவர் எதிர்வரும் டிசம்பர் 01 ஆம் திகதி தனது கடமையை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார்.


பல மனித உரிமை அடிப்படை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுத்து அவைகளில் இறைவனின் உதவியால் வெற்றி பெற்று வரும் இவர், குரல்கள் அமைப்பின் சிரேஷ்ட சட்டத்தரணியும், மனிதாபிமானம் நிறைந்த வழக்கறிஞருமாவார்.


அக்கரைப்பற்றை பிறப்பிடமாகக்கொண்ட சகோதரர் றதீப் அகமட், ஓய்வுபெற்ற இலங்கை வங்கி முகாமையாளர் அல்-ஹாஜ் மீராசாஹிப், உம்மு ஹபீபா ஆகியோர்களின் மூத்த மகனாவார். இவர் தனது ஆரம்பக்கல்வியை அக்கரைப்பற்று ஆண்கள் பாடசாலையிலும், இரண்டாம் நிலைக்கல்வியை அக்கரைப்பற்று மத்திய கல்லூரியிலும் கற்றார். 


சட்ட இளமாணிப்படிப்பை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பூர்த்தி செய்திருப்பதோடு Associate Certified Management Account (ACMA) - ICMASL மற்றும் Professional Qualification in Human resource Management - IPMSL ஆகிய கல்வித்தகைமைகளையும் கொண்டுள்ளார். தவிர, இரண்டு சட்ட முதுமாணிப்பட்டங்களைப் பூர்த்தி செய்துள்ளதோடு . Legal aid commission of Sri Lanka விலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் Chief inquiry officer ஆகவும் பணிபுரிந்திருக்கிறார். 


 இறைவன் இன்னுமின்னும் அவரது வாழ்வை மேன்மைப்படுதுவானாக. ஆமீன். 


மனமார்ந்த வாழ்த்துக்கள்...

Tags

ads