நிந்தவூர் 13ம் பிரிவைச் சேர்ந்த மீராஷாகிப் ஷாகிர் அஷமட் இன்று 06ம் திகதி உயர்நீதிமன்றத்தில்
நீதியரசர்கள் Vijith k. Malalgoda,A.H.M.D. NAWAS மற்றும் SHIORN GOONERATNE முன்னிலையில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
நிந்தவூரைச் சேர்ந்த இவர் அக்கரைப்பற்று அமானா வங்கி கிளையின் முகாமையாளராக கடைமையாற்றுவதோடு
தனது ஆரம்ப கல்வியைய நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்திலும்
சாதாரண தரம் வரை நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையில் பயின்றதுடன்
இதன் பின்னர் கல்முனை ஷாகிரா தேசிய பாடசாலையில் தனது உயர்கல்வியைப் பயின்று
2006 ம் ஆண்டு தனது பல்கழைக் கல்வியை கிழக்கு பழ்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தில் நிறைவு செய்து
2015 ம் ஆண்டு வணிக நிர்வாகத்துறையில் தனது முதுமானிப் பட்டத்தை போராதனைப் பழ்கலைக் கழகத்தில் நிறைவு செய்துள்ளதுடன்
15.03.2023 யில்
வெளியிடப்பட்ட சட்டக்கல்லூரி இறுதியாண்டு பரீட்சையில் சித்தியடைந்ததுடன்
கடந்த (2022.09.13) பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இலங்கையின் திறந்த பழ்கலைக்கழகம் நடாத்திய பட்டமளிப்பு விழாவில் சட்ட இளமானி பட்டத்தினையும் பெற்றுக்கொண்டார்.
இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர்களான மீராஷாகிப் மற்றும் ஆசாறா மீராஷாகிப் ஆகியோரின் இரண்டாவது புதல்வரும்
ஷக்கியா பானு , பொறியியலாளர் ஷக்கி அஷமட் மற்றும் விவசாயப் போதனாசிரியர் ஷமீர் அஷமட் ஆகியோரின் சகோதரரும் பிரபல வர்த்தகர் பாரிஸ் அவர்களின் மச்சினனும்
தற்போது அல் அஷ்ரக் தேசிய பாடசாலை ஆசிரியை மற்றும் மிக விரைவில் அதிபர் சேவையில் உள்ளீர்க்கப்படவுள்ள றிப்கா றசூல் யின் கணவரும்
முன்னால் அட்டாளைச்சோணை கல்விக் கல்லூரி பீடாதிபதி ரசூல் மற்றும் பசீலா தம்பதிகளின் மருமகனும் வைத்திய பீட மானவர் ஷமீல் ரசூல் ,றிஸ்னா ரசூல் ஆகியோரின் மச்சானுமாவார்
கிழக்கிலங்கையின் பிரபல சட்டத்தரணிகளான S.S. ABBASSE மற்றும் S. MUTHUMEERAN ஆகியோரின் சகோதரியின் மகனும் சட்டத்தரணி A.L .RIYAS ATHAM யின் சகோதரருமாவார்
சட்டத்துறையில் பிரவேசித்து சாதனைகள் படைக்க Citizen Media வலையமைப்பு சார்பாக வாழ்த்துகின்றோம்