Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

சனத் நிசாந்தவின் விபத்தில் நடந்ததை கூறிய சாரதி!


 சனத் நிசாந்தவின் விபத்தில் நடந்ததை கூறிய சாரதி!


அண்மையில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி, சம்பவம் தொடர்பிலான விபரங்களை தெரிவித்துள்ளார்.


ஜீப் வாகனத்தில் பயணித்த குறித்த குழுவினர் விரைவில் கொழும்பை அடைய முயற்சித்ததாகவும், இதன் போது சனத் நிஷாந்த வாகனத்தில் உறங்கிக் கொண்டிருந்ததாகவும் சாரதி தெரிவித்ததாக "அத தெரண" தெரிவித்துள்ளது.


"நெடுஞ்சாலையில், இடது பக்கத்திலிருந்து ஒரு காரை முந்திச் சென்றேன். நான் ஜீப்பை வலது பாதையில் நகர்த்த முற்பட்ட போது, முன்னால் சென்ற கண்டெய்னர் மீது மோதியது. ஜீப்பின் கட்டுப்பாட்டை இழந்தேன். அது தடுப்பில் மோதி நின்றது” என்றார்.


ராகமயிலுள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பிரபாத் எரங்க, பொலிஸாரின் விசாரணைகளின் போது விபத்து தொடர்பான விபரங்களை வெளியிட்டார்.


விபத்து இடம்பெற்ற போது வாகனம் மணிக்கு 160 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


இந்த விபத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் தலை மற்றும் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


சனத் நிஷாந்தவின் உடல் பொது மக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பொரளையில் உள்ள ஜயரத்ன இறுதிச்சடங்கு நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.


மறைந்த இராஜாங்க அமைச்சரின் பூதவுடல் இன்று மாலை புத்தளத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

ads