இலங்கையில் நடந்த சம்பவம்; 24 வயதான மகள் இறந்து 3 நாள்.. கல்லறைக்கு சென்ற தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி.!
ஒருசில தினங்களுக்கு முன் அடக்கம் செய்யப்பட்ட இளம்பெண்ணின் சடலம் மர்மமான முறையில் தோண்டியெடுத்து நிர்வாணமக்கப்பட்டுள்ளது!
பண்டாரவளை - பதுலுகம பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட இளம்பெண் ஒருவரின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த வியாழக்கிழமை அடக்கம் செய்யப்பட்ட 25 வயதான இளம்பெண் ஒருவரின் சடலமே தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.
நிமோனியா காய்ச்சல் காரணமாக குறித்த இளம்பெண் கடந்த புதன்கிழமை உயிரிழந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
இளம்பெண்ணின் தந்தை இன்று காலை மயானத்திற்கு சென்றிருந்த வேளை, தனது மகளின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டிருந்ததை அவதானித்ததை அடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.