Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

முதலாவது கப்பல் துறை பொறியியலாளராக நிந்தவூரின் வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் ஆதம்பாவா இfப்ஹாம்


 முதலாவது கப்பல் துறை பொறியியலாளராக நிந்தவூரின் வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் ஆதம்பாவா இfப்ஹாம்


இலங்கையின் கப்பல் துறை அமைச்சினால் அண்மையில் நடாத்தப்பட்ட சர்வதேச பட்டம் பெற்ற கப்பல் துறை பொறியியலாளர்களுக்கான அரச அனுமதிக்கான உள்வாங்கல் போட்டிப் பரீட்சையில் விசேட தரத்தில் சித்தியடைந்து 20.01.2024 அன்று இடம் பெற்ற நேர்முகத் தேர்வின் முடிவுகளின் அடிப்படையில் இலங்கையின் கப்பல் துறை அமைச்சின் அங்கீகாரம் பெற்ற அரச கப்பல் துறை பொறியியல் அதிகாரி - வகுப்பு 3 (Class-3 Marine Engineering Officer) இற்கான உள்வாங்கல் நியமனத்தை இfப்ஹாம் பெற்றுக் கொண்டுள்ளார்.


இதனடிப்படையில், ஆதம்பாவா இfப்ஹாம் நிந்தவூரின் முதலாவது அரச அங்கீகாரம் பெற்ற கப்பல் துறை பொறியியலாளராக வரலாற்றில் இடம் பிடித்துள்ளார். இவர் சீனிமுஹம்மது ஆதம்பாவா (ஜெமீல்- முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்) மற்றும் மர்ஹூமா முஹம்மது ஹசன் சித்தி குறைஷியா (நிஷா) ஆகியோரின் புதல்வர் ஆவார்.


சிறு வயது தொடக்கம் இத்துறையை தனது கனவாகக் கொண்டிருந்த இவர், தனது ஆரம்பக் கல்வி தொடக்கம் சாதாரண தரம் வரை கமு/அல்- இமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்திலும் உயர்தரத்தில் பௌதிக விஞ்ஞானத் துறையில் கமு/அல்-அஸ்ரக் தேசியப் பாடசாலையிலும் கல்வி கற்றதோடு, உயர்கல்விக்காக கப்பல் துறை பொறியியல் பீடத்தை தெரிவு செய்து கொழும்பு சர்வதேச கப்பல் துறை பொறியியல் கல்லூரியில் (CINEC) தனது பட்டப் படிப்பை நிறைவு செய்து கொழும்பு துறைமுகத்தில் அதற்கான பயிற்சிப் படிப்பையும் பூர்த்தி செய்துள்ளார். 


பயிற்சிக் காலத்தில் கப்பல் கட்டுமானம், நிர்மாணப் பொறியியல் ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்ற இfப்ஹாம், உலகின் முதற்தர கப்பல் போக்குவரத்து நிறுவனங்களுள் ஒன்றான சிங்கப்பூரின் பசுபிக் இன்டர்நெசனல் லைன்ஸ்(PIL) நிறுவனத்தின் கப்பல் துறை பொறியியல் இளம் அதிகாரியாக கடமையாற்றி தொடர்ந்தும் தனது மேற்படிப்பை பூர்த்தி செய்துள்ளார்.


மேலும் இலங்கை கப்பல் துறை அமைச்சின் மேற்படி பரீட்சையிலும் தனது திறமையை வெளிக்காட்டி நிந்தவூருக்கு சர்வதேச ரீதியில் வரலாற்றுப் பெருமை சேர்த்த ஆதம்பாவா இfப்ஹாம் அவரது சாதனைக்கு (சிடிசன் மீடியா) சார்பாக வாழ்த்துகிறோம்.

ads