Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

பாகிஸ்தான் அணியின் தலைவராக மீண்டும் பாபர் அசாம் நியமனம் !

 

பாகிஸ்தான் அணியின் தலைவராக மீண்டும் பாபர் அசாம் நியமனம் !


பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் தலைவராக பாபர் அசாம் நியமிக்கப்பட்டுள்ளார்.


அண்மையில் ஷாகீன் ஷா அப்ரிடி தலைமையில் நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 4-1 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது.


மேலும், ஷாகீன் ஷா அப்ரிடி தலைமையில் பாகிஸ்தான் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது.


இதனால் , ஷாகீன் ஷா அப்ரிடியின் தலைமை மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு அதிருப்தி ஏற்பட்டதாக அண்மையில் செய்திகள் வெளியாகின.


மேலும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதுடன் விரைவில் டி-20 உலக கோப்பை நடைபெறவுள்ளது.


இதனை கருத்தில் கொண்டு தற்போது பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் தலைவராக பாபர் அசாம் நியமிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.


கடந்த 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியின் தோல்வியை தொடர்ந்து தலைவர் பதவியில் இருந்து பாபர் அசாம் விலகியமை குறிப்பிடத்தக்கது.

ads