Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

நாட்டை வங்குரோத்து நிலைக்கு மாற்றும் திட்டத்தில் ரணில்!

 

நாட்டை வங்குரோத்து நிலைக்கு மாற்றும் திட்டத்தில் ரணில்: சாணக்கியன் எச்சரிக்கை!


அடுத்த ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்படாவிட்டால் நாட்டை மீண்டும் ஒரு வங்குரோத்து நிலைக்கு மாற்றிவிட்டே வெளியேறுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இவ்வாண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும், மொட்டுக்கட்சியின் நிலைப்பாடு தொடர்பிலும் எமது ஊடகப்பிரிவுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலிலேயே இதனை கூறியுள்ளார்.


மேலும் அவர் தெரிவிக்கையில்,


கோட்டபாய ராஜபக்சவின் புத்தகவெளீயீடும், பசில் ராஜபக்சவின் வருகையும் மொட்டுக்கட்சியின் தேர்தல் நகர்விற்கான ஆரம்பப்புள்ளியாக பார்க்கப்படுகிறது.


கோட்டபாய ராஜபக்சவின் பொய்களை உண்மையென நம்பி மக்கள் வாக்களிக்க கூடிய சூழலும் காணப்படுகிறது.


இதுவே இந்த நாட்டின் வங்குரோத்து நிலைக்கு முக்கிய காரணம்." என்றார்.

ads