"#நிந்தவூர் ஜனாஸா நலன்புரி அமைப்பிற்கு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கீடு"
நிந்தவூர் வாழ் பொது மக்களுக்கு பாரிய சேவையினை வழங்கிவரும் நிந்தவூர் ஜனாஸா நலன்புரி அமைப்பானது உருவாக்கம் பெற்ற காலம் தொட்டு பல்வேறு உதவிகளை வழங்கிவரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்கள் குறித்த அமைப்பினரால் விடுக்கப்பட்ட கதிரைகள் கொள்வனவுக்கான கோரிக்கையினை ஏற்றுக்கொண்டதோடு, தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒரு தொகை கதிரைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டிருந்தார்.
கொள்வனவு செய்யப்பட்ட கதிரைகளை அமைப்பினரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வானது இன்று (12.07.2024) இடம்பெற்றிருந்ததோடு, தொடராக பாராளுமன்ற உறுப்பினர் வழங்கிவரும் மேலான பங்களிப்பிற்காக அமைப்பின் உறுப்பினர்களால் விமர்சையாக வரவேற்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நிந்தவூர் ஜனாஸா நலன்புரி அமைப்பின் தலைவர் ஷபீக் அவர்கள் தனதுரையில் "பாராளுமன்ற உறுப்பினர் வழங்கிய நிதி உதவிகள் மூலம் மையவாடி களஞ்சிய அறைகளின் புனர்நிர்மாணம் இடம்பெற்றுள்ளதாகவும் மற்றும் கூடாரங்கள், கதிரைகள், காரியாலய தளபாடங்கள், லேப்டாப், பிரிண்டர், ப்ரொஜெக்டர், ஒலி அமைப்பு போன்றவை கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்ததோடு நன்றி பாராட்டியுமிருந்தார். மேலும் உரையாற்றிய அவர்; குறிப்பாக ஜனாஸா வாகன கொள்வனவிற்காக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்கள் மேற்கொண்டுவரும் முயற்சிகளை சபையோருக்கு முன்வைத்திருந்ததோடு, பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவத்தினையும் விளக்கியிருந்தமை விஷேட அம்சமாகும்.
இதனைத் தொடர்ந்து உரை நிகழ்த்திய பாராளுமன்ற உறுப்பினர் "ஏனைய ஊர்களுக்கும் முன்மாதிரியாக விளங்கும் நிந்தவூர் ஜனாஸா நலன்புரி அமைப்பின் கட்டமைப்பு மற்றும் செயற்பாடுகளை
வியந்து பாராட்டியதோடு, தன்னால் இயலுமான அனைத்து முன்னெடுப்புகளையும் அமைப்பின் எதிர்கால நலன் கருதி தான் மேற்கொள்ளவுள்ளதாகவும்" உறுதியளித்திருந்தார்.
இந்நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் அவர்களும் பிரதேச செயலகத்தினுடைய கணக்காளர் நஜீப் அவர்களும் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களினுடைய பிரத்தியோக செயலாளர் அஸ்லம் அவர்களும் ஜனாஸா நலன்புரி சபையினுடைய உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்
-ஊடகப் பிரிவு-
FC Media Division