- ஏ. ஷபாஅத் அஹமட் -
நிந்தவூர் 18ம் பிரிவைச் சேர்ந்த கவிஞர் முகம்மது இஸ்மாயில் உமர் அலி பிரதம நீதியரசர் முன்னிலையில் நேற்று (22.10.2024) சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தராக பணிபுரியும் உமர் அலி அவர்கள் தனது தொழில் தகைமைகளுக்காக Diploma in B.Sc Nursing,
Diploma in Counselling ஆகிய கற்கைகளில் சிறப்புச் சித்திகளை பெற்றிருந்தார்.
நிந்தவூர் அல் அஷ்றக் தேசிய பாடசாலையின் பழைய மாணவரான உமர் அலி அப்பாடசாலையின் அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளராக மூன்று தடவைகள் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.
தனது முகநூலில் பலவருடங்களாக எழுதிவந்த "வாப்படம்மா" என்னும் தலைப்பிலான ஒரு மூதாட்டியின் வாழ்வியலை நூல் வடிவில் வெளியிட்டு பாராட்டைப் பெற்றவர்.
நிந்தவூரின் சிறந்த சமுக சேவை இயக்கமான நிந்தவூர் நலன்புரிச் சபையின் உறுப்பினருமாவார்.
நிந்தவூரைச் சேர்ந்த அகமதுலெவ்வை உடையார் முகம்மது இஸ்மாயில், உமர்கத்தா உம்மு சல்மா தம்பதிகளின் ஏகபுதல்வரான உமர் அலி அவர்கள் அப்துல் லத்தீப் ஹாஜியார் றாபியத்துல் றைஹானாவின் அன்புக் கணவராவார்.
சட்டத்துறையில் இன்னும் ஆழக்கால் பதித்து
பிரகாசிக்கவேண்டுமென நிந்தவூர் - எனது மண் வாழ்த்தி மகிழ்கிறது.