கிழக்கு மாகாணத்தின் நிந்தவூர் கடற்கரையில் இராட்சத சுறா மீன் ஒன்று உயிருடன் கரை ஒதுங்கியுள்ளது.கடலுக்கு சென்ற மீனவர்கள் இன்று (22) காலை இதனை அவதானித்துள்ளனர்.
இந்நிலையில் கடற்கரையில் ஒதுங்கிய குறித்த இராட்சத சுறா மீனை கல்முனை கடற்ப்படையின் பூரண ஒத்துழைப்புடன் அப்பகுதி மீனவர்கள் ஒன்றிணைந்து மீண்டும் கடலுக்குள் அனுப்பி வைத்துள்ளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.