Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

இந்த வருடம் வீதி விபத்துக்களில் 1898 பேர் உயிரிழப்பு!


இந்த வருடத்தின் கடந்த ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதிவரை 1,818 வீதி விபத்துக்களில் 1,898 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 


கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோது காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.


தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக, வீதிகள் அதிகளவில் வழுக்கும் தன்மை கொண்டவையாக உள்ளன.


குறிப்பாக மலைநாட்டின் பல பகுதிகளில் வளைவுகள் மற்றும் பள்ளமான வீதிகளில் அவதான பயணிக்க வேண்டும் எனவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ கோரியுள்ளார்.


@CM

ads