ஜனாஸா அறிவித்தல்,
22-11-2024
நிந்தவூர் 05ம் குறிச்சி,பலாஹ் மஹல்லா, பாரூக் முஹம்மது சீத் அவர்கள் 21-11-2024 ஆம் தேதி வியாழக்கிழமை வபாத்தானார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் மர்ஹூம் இப்ராலெப்வை பாருக் (கைப்புள்ளையின் மூத்த மகன்), முஹம்மது இஸ்மாயில் பாத்திமா (நிலுபா டீச்சர்) ஆகியோரின் ஏக முதல்வரும்,
சலீம் கான் (முன்னாள் உப போலீஸ் பரிசோதகர், லண்டன்) மர்ஹும் ஹுசைன், பேபி, சுனைதா, ஆயிஷா ஆகியோரின் மூத்த சகோதரரின் மகனும்,
செயின் தாவுது (குஞ்சித்தம்பி), சுபைர் (ஆதம்பாவா கன்ஸ்ட்ரக்ஷன்), ஆகியோரது மூத்த மைத்துனரது மகனும்,
சட்டத்தரணி உமர் அலி (தாதிய உத்தியோகத்தர்) நிந்தவூர் ஆதார வைத்தியசாலை, பவுசியா, நஜிமா (ஓய்வு பெற்ற நெசவு போதனா ஆசிரியை), ஜெசிமா, உம்முக்குல்தூம் (மர்சுனா டீச்சர்) ஆகியோரின் சகோதரியின் மகனும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று காலை 10:30 மணி அளவில் ரஹ்மான் பள்ளிவாசலில் தொழுகை நடத்தப்பட்டு ரஹ்மான் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப்போமாக!
@CM