Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாட்டுக்கு வருகை!

Top Post Ad


நாளை மறுதினம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலைக் கண்காணிப்பதற்காக 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டுத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். 


தேர்தல் ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் நாட்டுக்கு வருகைதந்துள்ள அவர்கள் கண்காணிப்பு பணிகளை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் நாளைய தினம் வாக்களிப்பு நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்படவுள்ளன.


பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்ததையடுத்து தற்போது அமைதிக் காலம் அமுலில் உள்ளது.


@CM

Tags

ads