Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

அரிசி இறக்குமதிக்குத் தயார்: இறக்குமதியாளர்கள் அரசாங்கத்துக்கு அறிவிப்பு!


நாடு அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக அரிசியை தாங்கள் இறக்குமதி செய்வதற்கு தயாராக உள்ளதாக இறக்குமதியாளர்கள் அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளனர்.


இது தொடர்பில் அண்மையில் வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவுடன் இறக்குமதியாளர்கள் கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தியிருந்தனர். 


அதன்போது ஒரு கிலோ அரிசிக்கான இறக்குமதி வரியை 65 ரூபாவிலிருந்து 40 ரூபாவாக குறைக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


அரிசி இறக்குமதிக்குச் சந்தர்ப்பம் வழங்கினால் 15 நாட்களுக்குள் சந்தையில் நாட்டு அரிசிக்கான தட்டுப்பாட்டைக் குறைக்க முடியும் என இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


அத்துடன் விவசாயிகளிடம் கொள்வனவு செய்வதற்குப் போதியளவு நெல் கையிருப்பில் இல்லை எனவும் இறக்குமதியாளர்கள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தநிலையில், அரிசி இறக்குமதிக்கான விலை மனு கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


@CM

Tags

ads