பெண்கள் நலத்துறையின் நிதி ஒதுக்கீட்டில் திரிய மங்க் பெத்த பெற்றிக் உற்பத்தி திட்டம் வெற்றிகரமாக தொடக்கம்
நிந்தவூர் பிரதேசத்தில், பெண்கள், சிறுவர் மற்றும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சின் பெண்கள் பணியகத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் "திரிய மங்க் பெத்த பெற்றிக் உற்பத்தி - 2024" எனும் திட்டம் கடந்த அக்டோபர் 23ஆம் திகதி தொடங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வு, நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம்.அப்துல் லத்தீப்பின் வழிகாட்டலிலும், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர். றிஸ்வானுல் ஜன்னாவின் ஒருங்கிணைப்பிலும் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ், நிந்தவூர் பிரதேசத்தைச் சேர்ந்த குறைந்த வருமானம் கொண்ட பெண்கள் பயிற்சியில் இணைக்கப்பட்டனர்.
முதல் கட்டமாக பயிற்சி நிறைவடைந்த பெண்களின் பெற்றிக் தயாரிப்புகள் பிரதேச செயலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு, விற்பனை செய்யப்பட்டன.
மொத்தம் 10 நாட்களாக நடைபெற்ற பயிற்சியில் 10 பெண் பயிலுனர்கள் பங்குபற்றி, அவர்களுக்கான சான்றிதழ்களை நிகழ்வின் இறுதியில் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், நிதி உதவியாளர், மகளிர் அபிவிருத்தி வெளிக்கள உதவியாளர் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு நிகழ்விற்கு வாழ்த்துச் சொன்னமை குறிப்பிடத்தக்கது.