Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

தனிப்பெரும்பான்மையை பெற்ற ஜனாதிபதிக்கு சந்தோஷ் ஜா வாழ்த்து!


நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையைப் பெற்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சந்தித்து தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 


சக ஜனநாயக நாடாக இந்தியா, இந்த மக்கள் ஆணையினை வரவேற்பதாகவும், மக்களின் நலன்களுக்காக இருதரப்பு உறவினை மேலும் வலுவாக்க உறுதி கொண்டுள்ளதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.


அதேநேரம், இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால நட்பை முன்னேற்றுவதற்கும் இலங்கையின் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரம் தெரிவித்துள்ளது.


கொழும்பிலுள்ள உயர்ஸ்தானிகரகத்தின் பிரித்தானிய உத்தியோகப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இந்த விடயம் பகிரப்பட்டுள்ளது.


இதேவேளை, இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட இலங்கையிலுள்ள வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக ஜப்பானியத் தூதரகம் தெரிவித்துள்ளது.


இலங்கையுடனான ஆழமான நம்பிக்கை மற்றும் முன்கொண்டு நட்பைத் தொடர்ந்து செல்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமாடா தெரிவித்துள்ளார்.


@CM

Tags

ads