இன்றையதினம் (20) நாட்டின், மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊவா, மத்திய, கிழக்கு மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை, பொலன்னறுவை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
ஊவா மாகாணத்தின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊவா, கிழக்கு, மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும்.
கடலுக்கு செல்வோருக்கு அறிவுறுத்தல்
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்க மண்டலம் வடமேல் திசையில் நகர்ந்து வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நகர்ந்து எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் ஆந்திரா கடற்கரை அருகே வடக்கு நோக்கி நகரும்.
வங்காள விரிகுடா கடற்பரப்பில் மீன்பிடி உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபடுவோர் இந்த மண்டலம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் முன்னறிவிப்புகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இடியுடன் கூடிய மழை வேளைகளில் ஏற்படும் தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
@CM