நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் மழையுடனான வானிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, ஊவா மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் அந்த அறிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தவிர்ப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
@CM