Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக ஏ.எல்.எம். அஸ்மி நியமனம்!


அபு அலா 


இலங்கை நிருவாக சேவையின் மூத்த அதிகாரியான ஏ.எல்.எம்.அஸ்மி கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


கிழக்கு மாகாண திணைக்கள தலைவர்களுக்கான புதிய நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (27) திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர இந்த நியமனத்தை வழங்கி வைத்தார்.


அஸ்மியின் சேவைத் தரம், தகுதி மற்றும் உள்ளூராட்சி நிர்வாகத்தில் ஒரு தசாப்த அனுபவம் என்பவற்றின் அடிப்படையிலும் உள்ளூராட்சி நிர்வாகத்தின் வளர்ச்சிக்கு வழங்கி வந்த தலைமைத்துவ வழிகாட்டுதல்கள், நிர்வாக மற்றும் முகாமைத்துவ செயற்பாட்டுத் திறமைகள் என்பவற்றை கருத்திற்கொண்டே இந்த நியமனம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.


பொத்துவில், அக்கரைப்பற்று உதவி பிரதேச செயலாளர், அக்கரைப்பற்று மாநகராட்சி ஆணையாளர், கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளரும், பதிவாளரும், கல்முனை மாநகராட்சி ஆணையாளர், மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர், கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (ஆளணி மற்றும் பயிற்சி) போன்றவற்றில் கடமையாற்றிய ஏ.எல்.எம்.அஸ்மி, இலங்கை நிருவாக சேவையில் 20 வருடங்கள் அனுபவத்தைக் கொண்ட அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.


@CM

Tags

ads