Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

சாலையோரத்தில் உறங்கியவர்கள் மீது ஏறிய லொறி; இரு குழந்தைகள் உட்பட மூவர் பலி!


சாலையோரத்தில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது இன்று (23) அதிகாலை 12:30 மணியளவில் டிப்பர் லொறி ஒன்று மோதியதில் இரு குழந்தைகள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாத தெரிவிக்கப்படுகின்றது.


இச்சம்பவம் புனேவின் வாகோலியில் நடந்துள்ளதாகவும், இதில் மேலும் 6 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


இவ்விபத்தில் 1 வயதான வைபவி பவார், 2 வயதான வைபவ் பவார், 22 வயதான விஷால் பவார் ஆகியோரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


காயமடைந்தவர்கள் அமராவதியைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்றும் அவர்கள் புனேவுக்கு வந்திருந்தனர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


சம்பவம் நடந்த நேரத்தில் லொறியின் சாரதி மதுபோதையில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.


@CM

ads