நிந்தவூர் 04. இரண்டாம் குறுக்கு வீதியைச்சேர்ந்த முஹம்மது மக்கீன் முஹம்மது யாஸீர் ஆதம் தீவு முழுவதிற்குமான சமாதான நீதவானாக இன்று (30) வியாழன் கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்
மர்ஹூம் அல் ஹாஜ் ஆதம் லெப்பை முஹம்மது மக்கீன் ( JP,கவிஞர்) முன்னாள் இலங்கை போக்குவரத்து சபை கணக்குப்பதிவாளர், அப்துல் மஜீது சித்தி பழீலா (ஜாயிசா ஆசிரியை) ஆகியோர்களின் புதல்வரான இவர், தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை (NAITA) அம்பாறை மாவட்ட காரியால (Inspector)பரிசோதகராக
கடமையாற்றி வரும் இவர், நிந்தவூர் கமு/ அல் மதீனா பாடசாலை, கமு/ அல் அறபா வித்தியாலயம் , கமு/ அல் அஷ்றக் (தே.பா) மற்றும் கல்முனை சாஹிறா கல்லூரியின் பழைய மாணவருமாவார்.
@CM