-ஏ. ஷபாஅத் அஹமட் -
நிந்தவூர் வைத்தியசாலை வீதியில் வசிக்கும் அப்துல் ஹலீம் அக்தஸ் அஹமட் இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயம் இலங்கை முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து நடாத்திய தேசிய அல்குர்ஆன் மனன சுற்றுப்போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தெரிவாகியுள்ளார்.
மஸ்ஜிதுல் ஹக் பள்ளிவாயலில் இயங்கி வரும் ஹக் அல்குர்ஆன் மனன கலாபீடத்தின் பகுதிநேர வகுப்பில் அல்குர்ஆனை மனனஞ் செய்து வரும் அக்தஸ் அஹமட் அல்குர்ஆனின் 18 ஜுஸுக்களை மனனஞ் செய்துள்ளார்.
கடந்த 28.12.2024ந் திகதியன்று காத்தாங்குடி நாசர் மகாவித்தியாலயத்தில் கலந்துகொண்ட ஹிப்ளு மத்ரசா மாணவர்கள் 500பேர் கலாச்சாரத் திணைக்களத்தின் நேரடிக் கண்காணிப்பில் தேசிய அல்குர்ஆன் மனன சுற்றுப் போட்டி நடைபெற்றது.
இப் போட்டியில் நிந்தவூர் ஹக் பள்ளிவாயலின் மேல்மாடியில் மிகச் சிறப்பாக இயங்கி வரும் ஹக் அல்குர்ஆன் மனன கலாபீடத்திலிருந்து ஆறு மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையைக் காண்பித்தனர். இவர்களில் நிந்தவூர் அஸ் ஸபா வித்தியாலயத்தில் தரம் 4ல் கல்வி பயிலும் ஒன்பது வயது மாணவரான அக்தஸ் அஹமட் இறுதிப் போட்டிக்கு தெரிவானார்.
அக்தஸ் அஹமதை ஹக் அல்குர்ஆன் மனன கலாபீடத்தின் அதிபர் அல்ஹாபிழ் மௌலவி ஷிம்லி அவர்களும், உஸ்தாத்மார், நிர்வாக சபையினர் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
மாணவன் அக்தஸ் அஹமட் Dr. அப்துல் ஹலீம் அவர்களின் புதல்வராவார்.
மாணவர் அக்தஸ் அஹமட் அவர்களுக்கு சிடிசன் மீடியா சார்பாக வாழ்த்துக்கள்.
@CM