கடந்த காலத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்ட வகையில் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரச பணியாளர்களுக்கு எதிர்வரும் பாதீட்டின் போது வேதனம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரச பணியாளர்களின் வேதன பிரச்சினை தொடர்பில் ஏலவே குழுவொன்று அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகளுக்கு அமைய அமைச்சரவை ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
@CM