கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் நாளை முதல் மீண்டும் வழமைக்கு திரும்புகின்றன.
சீரற்ற வானிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் இன்று (20) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் அனைத்துப் பாடசாலைகளும் நாளை முதல் மீண்டும் திறக்கப்பட்டு வழமைபோல் கல்வி செயற்பாடுகள் நடைபெறும் என கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்தார்.
இதேவேளை சீரற்ற காரணமாக வடமத்திய வானிலை மாகாண பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
@CM