குப்பையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட "ஹாரி போட்டர் ” நாவலின் முதல் பதிப்பு புத்தகம் சுமார் 22 இலட்சத்திற்கு ஏலம் போய் உள்ளது.
1997ஆம் ஆண்டு ஜே.கே.ரவுலிங் எழுதிய 'ஹாரி போட்டர்' புத்தகம் வெளியானது.
இந்த புத்தகம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்களை ரவுலிங் எழுதினார்.
ஹாரி பாட்டர் அடிப்படையாகக் புத்தகங்களை கொண்டு திரைப்படங்களும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன.
இந்த நிலையில் இந்த புத்தகம் குப்பையிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இணையத்தளத்தின் மூலம் கடந்த சனிக்கிழமை(08) ஏலம் நடைபெற்றுள்ளது.
ஏலம் நடத்தும் டேனியல் பியர்ஸ் என்பவர், உயிரிழந்த ஒருவரின் உடைமைகளுடன் இந்த புத்தகத்தைக் கண்டெடுத்துள்ளார்.
500 புத்தகங்களே அச்சிடப்பட்டது என்றும் பொது நூலகங்களுக்கு விநியோகிக்கப்பட்ட 300 பிரதிகளில் ஒன்று இது என்றும் கூறப்படுகிறது.
@CM