இலங்கை சட்ட கல்லூரி நுழைவு பரீட்சையில் நிந்தவூரை சேர்ந்த அத்பா அலாவுதீன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 5000 இற்கும் அதிகமான பேர் தோற்றி வெறும் 201 மாணவர்கள் மாத்திரம் தெரிவு செய்ய படும் இப்பரீட்சையில் எமது நிந்தவூர் மாணவி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் இலங்கை ஸ்ரீ ஜயவர்தபுர பல்கலைகழத்தில் சமூக பணி கற்கை நெறியை இரண்டாம் வருடத்தில் கற்று வருவது குறிப்பிட தக்க விடயமாகும்.
இவர் எதிர்காலத்தில் சிறந்த சட்ட தரணியாக வர சிடிசன் மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
@CM