Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை!


இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை, குருணாகல்,மன்னார் மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.


அத்துடன், ஊவா மாகாணத்திலும், அம்பாறை, மட்டக்களப்பு ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


@CM

Tags

ads