இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மாகாணங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடமத்திய, ஊவா, கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, குருணாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிக ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.
கடல் பகுதிகளில்
காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக அம்பாந்தோட்டை வரையிலும், கொழும்பிலிருந்து காலி வழியாக மாத்தறை வரையிலுமான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
காற்றானது வடகிழக்கில் இருந்து அல்லது குறிப்பிட்ட திசை இல்லாமல் வீசக் கூடும் என்பதுடன், காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு சுமார் 20-30 கி.மீ. வேகத்தில் காணப்படலாம்.
நாட்டை சூழவுள்ள கடல் பரப்புகள் சாதாரண நிலை முதல் ஓரளவான கொந்தளிப்பானதாகக் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, குறித்த கடற்பரப்புகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், அக்கடற்பரப்புகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாக மாறக் கூடும்.
@CM