தென்கிழக்கு பல்கலைக்கழக பேரவையின் புதிய உறுப்பினராக நிந்தவூர் பிரதேச செயலாளர் நியமனம்!
- ஏ. ஷபாஅத் அஹமட் -
தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு புதிய பேரவை நியமிக்கப்பட்டுள்ளது. இதன் முதலாவது பேரவைக்கூட்டம் இன்று பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.
புதிதாக நியமனம் பெற்றுள்ள புதியபேரவை உறுப்பினர்களில் ஒருவராக நிந்தவூர் பிரதேச செயலகத்தின் செயலாளர் சட்டத்தரணி. எம். ஏ. அப்துல் லத்தீப் அவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய பேரவையில் நியமனம்பெற்றுள்ள சிறந்த கல்விப் புலமையாளர்களோடு நிந்தவூர் பிரதேச செயலாளரும் நியமனம் பெற்றுள்ளமையானது பெருமை கொள்ளத்தக்கதாகும்.
பிரதேச செயலாளர் சட்டத்தரணி அப்துல் லத்தீப் அவர்கள் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பழைய மாணவராவார்.
இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியும், பல்முக ஆளுமையும் கொண்ட இவரது பேரவை உறுப்பினர் பதவியானது தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு உந்து சக்தியாக இருக்குமென நம்பலாம்.
இந்த நியமனம் தொடர்பில் நிந்தவூர் பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவரும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
சிடிசன் மீடியா சார்பாக பிரதேச செயலாளருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
@CM