காலி-கொழும்பு பிரதான வீதியின் களுத்துறை வஸ்கடுவ பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தில் மோதி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுவன் 2 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
பேருந்து சாரதி காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
உயிரிழந்த சிறுவன் தனது பாட்டியுடன் கழிவுகளை சேகரிக்கும் வண்டிக்கு குப்பைகளை கொடுப்பதற்காகச் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
@CM