Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

டைட்டானிக் பயணி ஒருவர் எழுதிய கடிதம் 400,000 அமெரிக்க டொலருக்கு விற்பனை!


டைட்டானிக் கப்பல் மூழ்குவதற்கு சில நாட்களுக்கு முன்பாக, டைட்டானிக் பயணி ஒருவர் எழுதிய கடிதம் இங்கிலாந்தில் நடந்த ஏலத்தில் 400,000 அமெரிக்க டொலருக்கு விற்பனையாகியுள்ளது. 


கர்னல் ஆர்ச்சிபால்ட் கிரேசியினால் எழுதப்பட்ட குறித்த கடிதம் எதிர்பார்க்கப்பட்டதை விட 5 மடங்கு அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளது.


இது சவுத்தாம்ப்டனில் வைத்து கர்னல் ஆர்ச்சிபால்ட் கிரேசி, கப்பலில் ஏறிய நாளான 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் திகதி எழுதப்பட்ட கடிதமாகும்.


@CM

Tags

ads