அட்டாம்பிட்டிய - நெலுவ, கிம்ப்ரோஸ் பகுதியில் மின்னல் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அத்துடன், 5 பெண்களும், ஆண் ஒருவரும் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள தேயிலை மடுவமொன்றில் வைத்து அவர்கள் இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் பலியான பெண், குறித்த பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
@CM