Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவித்தல்!


சாதாரண தரப் பரீட்சை சித்தியின்றி தொழிற்கல்வி உயர் தரத்திற்கு விண்ணப்பங்கள் கோரல்


2025 ஆம் ஆண்டுக்கான உயர் தர தொழிற்கல்விப் பிரிவின் 12 ஆம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


இதன்படி, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்திருக்க வேண்டிய அவசியமின்றி மாணவர்கள் இந்த தொழிற்கல்வி உயர் தரவுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.


12 ஆம் தரத்தில் இணையும் மாணவர்கள், 13 ஆம் தரத்தில் சுகாதாரம், ஆடை வடிவமைப்பு, வாகனவியல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட 28 வகையான தேசிய தொழிற்கல்வி தகுதி (NVQ) நிலை 4 பாடநெறிகளில் ஒன்றைத் தொடர முடியும்.


விண்ணப்பப் படிவங்களையும், தகுதிபெறும் பாடசாலைகளின் பட்டியலையும் கல்வி அமைச்சின் இணையத்தளமான https://moe.gov.lk/2025/05/37984/

ஊடாக பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

மேலும் தகவல்களுக்கு, விண்ணப்பதாரர்கள் 011 278 7136 அல்லது 011 278 6746 ஆகிய தொலைபேசி இலக்கங்களில் வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தொடர்பு கொள்ளுமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.




@CM

ads