கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப் போட்டி நேற்றைய முந்தினம் (24) தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம் பெற்றது. கிழக்கு மாகாண கராத்தே சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட மாகாண கராத்தே சுற்றுப் போட்டியில் இருபது வயதுக்குட்பட்ட ஆடவர் பிரிவின் கீழ் போட்டியிட்ட நிந்தவூர் இமாம் காஸ்ஸாலி வித்தியாலய மாணவன் முகம்மது மர்சூக் முகம்மது றினாஸ் சாதுலி அவர்கள் முதலாமிடத்தைப் பெற்று தேசிய ரீதியில் இடம்பெறவுள்ள போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தகவல் : ஜபறுல்லா சாஹிப்
இவர் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர் மர்ஹூம் எஸ்.ஐ.எம்.மர்சூக், எம். நூறுல் ஹிதாயா ஆகியோரின் இரண்டாவது புதல்வராவார்.
இவர் எதிர்காலத்தில் இத்துறையில் பல சாதனைகளையும் விருதுகளையும் பெற Citizen Media சார்பில் வாழ்த்துகிறோம்.