நிந்தவூரைச் சேர்ந்த Dr. முகமட் சரிப் பாரிஸ் அகமட் அவர்கள் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மருத்துவ (Sports and Exercise Medicine)நிபுணர்களுக்கான வெளிநாட்டுப் பயிற்சிக்காக ஐக்கிய இராச்சியத்திற்கு இம்மாதம் பயணமாகின்றார்.
இப்பயிற்சியின் பின்னர் Dr. பாரிஸ் அகமட் அவர்கள் நமது பிராந்தியத்தில் முதலாவது நிபுணராக இத்துறையில் வெளியாகவுள்ளதுடன் இத்துறையில்இலங்கையின் முதலாவது நிபுணத்தவர்கள் குழாத்தினைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது..
இவர் தனது ஆரம்பக் கல்வியை நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையில் கற்றதுடன
மருத்துவத்துறையினை களனி பல்கலைக்கழகத்தில் கற்று 2001 இல் பட்டம் பெற்றதுடன்
2002-2003காலப்பகுதியில் பேராதனை போதனா வைத்தியசாலையிலும், 2004-2006 காலப்பகுதியில் அம்பாரை பொது வைத்திய சாலையிலும், 2007-2011 இல் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையிலும், 2012-2016 இல் விஷேட விளையாட்டு வைத்தியராக ஒமான் நாட்டிலும் கடமையாற்றினார்.
இதன்பின் 2017 இல் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மருத்துவ வைத்தியத்துறையினர்களிக்கான தேர்வுப்பரட்சையில் நாட்டில் முதலிடத்தில் சித்தியடைந்து 2021 இல் பட்டப்பின் வைத்தியாராக தரம் பெற்று 2022 இல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்நாட்டு பயற்சியையும் பூர்த்தி செய்து
தற்போது கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் (Colombo South Teaching Hospital, Kalubowlila) வைத்திய நிபுணராக கடமையாற்றுவதுடன் நாளை வெளிநாட்டு
பயிற்சிக்காக ஐக்கிய இராட்சியத்தின் விளையாட்டு, உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய நிறுவன பல்கலைக்கழக கல்லூரி லண்டன் மருத்துவமனை (Institute of Sport, Exercise and Health of University College London Hospital) மற்றும் லீட்ஸ் பல்கலைக்கழகத்திற்கு (University of Leeds, UK) பயணமாகின்றார்.
டாக்டர் பாரிஸ் அகமட் அவர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர்களான S.M. சரிப் மற்றும் ஜுனைதா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும் காலம்சென்ற முன்னாள் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் K முகமட் தம்பி அவர்களின் மருமகனும் ஆவார்.
அவரது பயிற்சி சிறப்புற பூர்த்தி பெற்று எமது பிராந்தியத்தில் முதலாவது விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மருத்துவ வைத்திய நிபுணராக தடம் பதிக்க வாழத்துகிறோம்.