Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

கல்முனை பிரதேச செயலக கணக்காளராக கே.எம்.எஸ் அமீர் அலி பதவியேற்பு

 


கல்முனை பிரதேச செயலக கணக்காளராக இலங்கை கணக்காளர் சேவையில் முதலாம் தர உத்தியோகத்தரான சம்மாந்துறையைச் சேர்ந்த கே.எம்.எஸ் அமீர் அலி இன்று(19) தனது கடமைகளை பொறுப்பேற்றார்.


சம்மாந்துறையை பிறப்பிடமாக கொண்ட இவர் இலங்கை கணக்காளர் சேவையில்  1997ம் ஆண்டு உள்ளீர்க்கப்பட்டு கணக்காய்வாளர் திணைக்களத்தில் கணக்காய்வு பரீட்சகராக கடமையாற்றினார். பின்னர் 2008ம் ஆண்டு தமன பிரதேச செயலகத்தில் கணக்காளராகவும், 2009ம் ஆண்டு அம்பாறை கச்சேரியில் கணக்காய்வு அத்தியட்சகராகவும் 2013ம் ஆண்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கணக்காளராகவும் 2020ம் ஆண்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் கணக்காளராக கடமையாற்றியதோடு தற்போது கல்முனை பிரதேச செயலகத்தில் கணக்காளராக கடமைகளை இன்று பொறுப்பேற்றார்.


இக் கடமையேற்கும் நிகழ்வில் பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி,கணக்காளர் யூ.எல் ஜவாஹீர்,நாவிதன்வெளி பிரதேச செயலக கணக்காளர் கே.றிஸ்வி யஹ்சர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலீஹ், அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் கே.எல் யாஸீன் பாவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

(சர்ஜுன் லாபீர்)




Tags

ads