நேற்று வெளியான கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் படி நிந்தவூர் பகுதியில் முதன்முறையாக தமிழ் மாணவி ஒருவர் வைத்திய துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நிந்தவூர் அல் அஸ்ரக் தேசிய பாடசாலையில் உயிரியல் பிரிவில் கல்வி கற்ற குணசேகரம் ஜனுசிகா என்ற மாணவியே இவ்வாறு சிறந்த பொறுப்பேற்றினை பெற்றுள்ளார்.
இவர் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் ஒன்பது பாடங்களிலும் அதி விசேட சித்தி 9A பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.