நிந்தவூரில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம பிரிவுகளில் நடைபெற்று வரும் குடிசன மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக நேற்று 21.11.2023 ம் திகதி அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம அவர்கள் மற்றும் மாவட்ட புள்ளிவிபரவியலாளர், புள்ளிவிபரவியல் இணைப்பாளர் ஆகியோர்கள் நிந்தவூர் 15, 18 ம்
கிராம பிரிவுகளில் கள விஜயம் மேற்கொண்டு களப்பணிகள் தொடர்பான அவதானிப்புக்களை மேற்பார்வையிட்டனர்.
மேலும் இவர்களுடன் நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM. அப்துல் லத்தீப் அவர்களுடன், நிருவாக உத்தியோகத்தர், கிராம நிருவாக உத்தியோகத்தர்,புள்ளிவிபரவியல் உத்தியோகத்தர் மற்றும் வட்டத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.