Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

சட்டத்தரணியாக பசில் முஹம்மட் இன்ஷாப் சத்தியப்பிரமாணம்.

 


நிந்தவூர்  16ம் பிரிவைச் சேர்ந்த பசில் முஹம்மட் இன்ஷாப் இன்று 05ம் திகதி உயர்நீதிமன்றத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். 


நிந்தவூரைச் சேர்ந்த இவர்

சாதாரண தரம் வரை நிந்தவூர் அல் மதீனா பாடசாலையில் பயின்றதுடன் இதன் பின்னர் நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையில் தனது உயர்கல்வியைப் பயின்று, 2021ம் ஆண்டு BCAS தனியார் கல்வி நிறுவனத்தினூடாக லண்டனில் அமைந்துள்ள Wolverhampton பல்கலைக்கழகத்தில் தனது சட்டமாணி கற்கை நெறியினை நிறைவு செய்த பின்னர் இலங்கை சட்டக்கல்லூரியில் நடைபெற்ற பரீட்சைகள் யாவற்றிலும் தோற்றி சித்தியும் பெற்றார்.


இவர் மர்ஹும் இளையதம்பி பசீல் மற்றும்  முகம்மதலியார் சம்சுன்னிஸா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், சட்டத்தரணி நஜிமுதீன் சித்தி நஜீபா அவர்களின் கணவருமாவார்.


 இவர் கடந்த 13 வருடங்களாக நீதிமன்றில் கடமையாற்றியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Tags

ads