மின்சாரத்தை துண்டிக்க சென்ற மின்சார சபை ஊழியர்கள் மீது தாக்குதல்
கம்பஹா பிரதேசத்தில் மின்சாரத்தை துண்டிக்க சென்ற இரண்டு மின்சார சபை ஊழியர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (04) மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த தாக்குதலில் காயமடைந்த இரண்டு மின்சார சபை ஊழியர்களும் சிகிச்சைக்காக கம்பஹா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.