Type Here to Get Search Results !
Developed by Cleverbit

இலங்கையின் பாடசாலை கட்டமைப்பில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்


 இலங்கையின் பாடசாலை கட்டமைப்பில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்


கல்வி நிர்வாகத்தின் ஊடாக அடுத்த மாதம் முதல் கல்வி மறுசீரமைப்புக்கான அடிப்படை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.


அதற்கமைய, எதிர்வருங்காலத்தில், 1-5 வகுப்புகள் உள்ள பாடசாலைகள் ஆரம்ப பாடசாலைகளாக வகைப்படுத்தப்படும்.


6-10 வகுப்புகள் உள்ள பாடசாலைகள் இளநிலைப் பாடசாலைகளாகவும் 10-13 வகுப்புகள் உள்ள பாடசாலைகள் மேல்நிலைப் பாடசாலைகளாகும் வகைப்படுத்தப்படும்.


ஆட்சேர்ப்பு

2018-2020 ஆம் கல்வியாண்டில் தேசிய கல்வி விஞ்ஞான டிப்ளோமா பயிற்சியை பூர்த்தி செய்தவர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ads