அதிகாலை வீடொன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு!
மீகொடை- படவல பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று (31) அதிகாலை அடையாளந் தெரியாத ஒருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், குறித்த வீட்டின் மீது 4 தடவைகள் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கி பிரயோகத்தினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீட்டின் உரிமையாளரை அச்சுறுத்துவதற்காகவே துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
@CM